செய்திகள்
விபத்து

ஒத்தக்கடை அருகே தனியார் நிறுவன ஊழியர் வாகனம் மோதி பலி

Published On 2020-01-11 09:03 GMT   |   Update On 2020-01-11 09:03 GMT
ஒத்தக்கடை அருகே தனியார் நிறுவன ஊழியர் வாகனம் மோதி பலியானார்.

மேலூர்:

மதுரை ஒத்தக்கடை அருகேயுள்ள வவ்வால் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மகன் ஆதிவளவன் (வயது 20). இவர் மேலூரையடுத்த வெள்ளரிப்பட்டியில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

இரவு பணிக்காக நேற்று இரவு 11 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டார். நெல்லியேந்தல்பட்டி 4 வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டி ருந்தது.

அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் ஆதிவளவன் படுகாயமடைந்தார்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். விபத்து பற்றி அறிந்த ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

ஆதிவளவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆதிவளவன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிய வாகனம் எது என்பதை அறிய தீவிர விசாரணை நடைபெற்றது.

Tags:    

Similar News