கோவில்கள்
தரிசித்தால் முக்தி தரும் சிதம்பரம் நடராஜர் ஆலயம்
இங்கு மூலவரான திருமூலநாதர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவரது சன்னிதி மேற்கு பிரகாரத்தின் மேலே அமைந்துள்ளது. இருப்பினும் நடராஜரே, இங்கு பிரதானமானவர்.
பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாக வணங்கப்படும், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்..
மூலவர்: திருமூலநாதர் (சபாநாயகர், கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், பொன்னம்பல கூத்தன்)
அம்பாள்: உமையாம்பிகை (சிவகாமசுந்தரி)
தல விருட்சம்: தில்லை மரம்
தீர்த்தம்: சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம்ம தீர்த்தம்
தங்கத்தால் வேயப்பட்ட கூரையின் கீழ் நடராஜர் வீற்றிருக்கிறார். இந்த சன்னிதியின் அமைப்பு, மனித உடல் அமைப்போடு ஒப்பிட்டு அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.
தேவாரப் பாடல் இடம்பெற்ற தமிழ்நாட்டின் 274 சிவாலயங்களில், முதன்மையானதாக இந்த சிதம்பரம் நடராஜர் திருத்தலம் உள்ளது.
இங்கு மூலவரான திருமூலநாதர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவரது சன்னிதி மேற்கு பிரகாரத்தின் மேலே அமைந்துள்ளது. இருப்பினும் நடராஜரே, இங்கு பிரதானமானவர்.
நடராஜர் சன்னிதி அருகிலேயே, 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிந்தராஜப் பெருமாளின் தலம் இருப்பது சிறப்புக்குரியது.
நடராஜர் சன்னிதி எதிரே உள்ள மண்டபத்தில் நின்றபடி அருளும், பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூவரையும் தரிசிக்கலாம்.
சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் ஒரு சிறு வாசல் இருக்கும். அதில் உள்ள திரை அகற்றப்பட்டு திறந்த வெளி பகுதிக்கு தீபாராதனை காட்டப்படும். இங்கு இறைவன் ஆகாயமாக இருப்பதாக ஐதீகம். இதுவே ‘சிதம்பர ரகசியம்’ என்றும் சொல்லப்படுகிறது.
மூலவரே வீதி உலா வரும் ஆலயமாக சிதம்பரம் மட்டுமே உள்ளது. இங்குள்ள நடராஜர், தேரில் பவனி வருவார்.
திருவாரூரில்பிறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பதுபோல, வாழ்வில் ஒரு முறையேனும் சிதம்பரம் ஆலயத்திற்கு வந்து தரிசித்தாலே முக்தி கிடைத்து விடும்.
இத்தல இறைவனை வேண்டினால் மன நிம்மதி கிடைக்கும். கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவோர், இத்தல இறைவனையும், இறைவியையும் வணங்கலாம்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலானது, கடலூரில் இருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடு துறையில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மூலவர்: திருமூலநாதர் (சபாநாயகர், கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், பொன்னம்பல கூத்தன்)
அம்பாள்: உமையாம்பிகை (சிவகாமசுந்தரி)
தல விருட்சம்: தில்லை மரம்
தீர்த்தம்: சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம்ம தீர்த்தம்
தங்கத்தால் வேயப்பட்ட கூரையின் கீழ் நடராஜர் வீற்றிருக்கிறார். இந்த சன்னிதியின் அமைப்பு, மனித உடல் அமைப்போடு ஒப்பிட்டு அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.
தேவாரப் பாடல் இடம்பெற்ற தமிழ்நாட்டின் 274 சிவாலயங்களில், முதன்மையானதாக இந்த சிதம்பரம் நடராஜர் திருத்தலம் உள்ளது.
இங்கு மூலவரான திருமூலநாதர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவரது சன்னிதி மேற்கு பிரகாரத்தின் மேலே அமைந்துள்ளது. இருப்பினும் நடராஜரே, இங்கு பிரதானமானவர்.
நடராஜர் சன்னிதி அருகிலேயே, 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிந்தராஜப் பெருமாளின் தலம் இருப்பது சிறப்புக்குரியது.
நடராஜர் சன்னிதி எதிரே உள்ள மண்டபத்தில் நின்றபடி அருளும், பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூவரையும் தரிசிக்கலாம்.
சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் ஒரு சிறு வாசல் இருக்கும். அதில் உள்ள திரை அகற்றப்பட்டு திறந்த வெளி பகுதிக்கு தீபாராதனை காட்டப்படும். இங்கு இறைவன் ஆகாயமாக இருப்பதாக ஐதீகம். இதுவே ‘சிதம்பர ரகசியம்’ என்றும் சொல்லப்படுகிறது.
மூலவரே வீதி உலா வரும் ஆலயமாக சிதம்பரம் மட்டுமே உள்ளது. இங்குள்ள நடராஜர், தேரில் பவனி வருவார்.
திருவாரூரில்பிறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பதுபோல, வாழ்வில் ஒரு முறையேனும் சிதம்பரம் ஆலயத்திற்கு வந்து தரிசித்தாலே முக்தி கிடைத்து விடும்.
இத்தல இறைவனை வேண்டினால் மன நிம்மதி கிடைக்கும். கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவோர், இத்தல இறைவனையும், இறைவியையும் வணங்கலாம்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலானது, கடலூரில் இருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடு துறையில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.