செய்திகள்
கோப்புபடம்

தொழில்வரி பிடித்தம் செய்வதை எதிர்த்து போராட்டம் - தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

Published On 2020-09-25 13:35 GMT   |   Update On 2020-09-25 13:35 GMT
தேயிலைத்தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் தொழில் வரி பிடித்தம் செய்வதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன.
கூடலூர்:

ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப்., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளதாவது:-

தொழிலாளர்களின் தின ஊதியத்தில் தொழில் வரி பிடித்தம் செய்ய வேண்டும் என நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் தோட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு தொழில் வரி பிடித்தம் செய்து நகராட்சி நிர்வாகத்திடம் செலுத்தாத தேயிலைத் தோட்டங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் ஒரு சில தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களின் எதிர்ப்பையும் மீறி நகராட்சிக்கு தொழில் வரி பிடித்தம் செய்து அனுப்பியுள்ளது. தின மற்றும் குறைந்த பட்ச ஊதியம் சட்டத்தின் கீழ் ஊதியம் பெறும் தொழிலாளர்களிடம் தொழில் வரி பிடித்தம் செய்து சம்பளம் வழங்குவது தண்டனைக்குரிய குற்றம் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறி உள்ளது. இச்செயல் தொழிலாளர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும்.

எனவே தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை திருப்பி செலுத்தவும், எதிர்காலத்தில் தொழில் வரியை குறைந்த பட்ச சட்டப்படி தின ஊதியம் பெரும் தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்ய நிர்ப்பந்திக்க கூடாது என்றும் வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்தப்படும். இதனை சட்டப்படி தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News