செய்திகள்
உணவில் செத்து கிடந்த எலி

உத்தரபிரதேசத்தில் மதிய உணவில் செத்து கிடந்த எலி - 8 மாணவர்கள் உடல்நலம் பாதிப்பு

Published On 2019-12-04 03:47 GMT   |   Update On 2019-12-04 03:47 GMT
உத்தரபிரதேசத்தில் எலி செத்து கிடந்த மதிய உணவை சாப்பிட்ட 8 மாணவர்கள், ஆசிரியர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முசாபர்நகர்:

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த முஸ்தபாபாத் பஞ்செண்டா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

அப்போது உணவில் எலி செத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த உணவை சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர் ஒருவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர்களை ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.



Tags:    

Similar News