செய்திகள்
பலியான ராஜமுருகன் -விபத்தில் சிக்கிய காரை படத்தில் காணலாம்.

சீர்காழி அருகே மரத்தில் கார் மோதி தி.மு.க. பிரமுகர் பலி

Published On 2019-11-15 05:20 GMT   |   Update On 2019-11-15 05:20 GMT
மகளின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற அ.தி.மு.க. பிரமுகர் விபத்தில் பலியான சம்பவம் சீர்காழி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீர்காழி:

கடலூர் மாவட்டம் வாக்கூரை சேர்ந்தவர் ராஜ முருகன்(வயது50). இவர் கீரப்பாளையம் மேற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். ராஜமுருகனின் மகளுக்கு திருமணம் நடைபெற இருப்பதால் அவர் தனது உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து வந்தார்.

நேற்று முருகனும், அவரது உறவினர் சக்திவேல் என்பவரும் நாகை மாவட்டம் சீர்காழிக்கு வந்து விட்டு இரவு 12 மணி அளவில் புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்று கொணடு இருந்தனர். காரை ராஜ முருன் ஓட்டி சென்றார். அப்போது கார் டயர் திடீரென வெடித்தது. இதில் கார் நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள புளிய மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ராஜ முருகனும், சக்திவேலும் படுகாயம் அடைந்தனர். ராஜ முருன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சக்திவேலை மீட்டு சிகிச்சைக்குகாக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பலியான ராஜ முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News