செய்திகள்
கொலை

தஞ்சை அருகே தொழிலாளி வெட்டிக்கொலை: 5 பேர் கைது

Published On 2021-07-11 12:34 GMT   |   Update On 2021-07-11 12:34 GMT
தஞ்சை அருகே தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலியமங்கலம்:

தஞ்சையை அடு்த்த சாலியமங்கலம் அருகே உள்ள கொட்டைகொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் பிரபு(வயது35). இவரது தம்பி சின்னராஜா (30). இருவரும் தொழிலாளிகள். சம்பவத்தன்று சாலியமங்கலம் கீழத்தெரு சாலை பிரிவு பகுதியில் வந்த பிரபு, சின்னராஜா ஆகியோரை இடபிரச்சினை காரணமாக மர்மநபர்கள் வழிமறித்து கத்தி, அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சின்னராஜா தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று இந்த கொலைவழக்கில் தொடர்புடைய கொட்டைகொல்லைமேடு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (27), ஜெயராமன் (24), விக்னேஷ் (25), விவேக்குமார் (21), கணேசன் (56) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News