செய்திகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்குழு கூட்டம் -முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்

Published On 2021-07-15 14:35 GMT   |   Update On 2021-07-15 14:35 GMT
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
சென்னை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், அ.சௌந்தராஜன், உ.வாசுகி, பி.சம்பத் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு, நீட் தேர்வில் விலக்கு அளிக்கவேண்டும், தடுப்பூசி ஒதுக்கீட்டில் தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் ஆகிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இத்தகவலை கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
Tags:    

Similar News