ஆன்மிகம்
தீபத்திருவிழாவை முன்னிட்டு மகா தீபமலையில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

தீபத்திருவிழாவை முன்னிட்டு மகா தீபமலையில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

Published On 2020-11-09 03:12 GMT   |   Update On 2020-11-09 03:12 GMT
தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் மலையில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து நேற்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மலை உச்சி வரை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான தீபத் திருவிழா வருகிற 20-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவானது 10 நாட்கள் நடைபெறும்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த ஆண்டு தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் மலையில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து நேற்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் போலீசார் மலை உச்சி வரை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
Tags:    

Similar News