செய்திகள்
பொன். ராதாகிருஷ்ணன்- ரஜினிகாந்த்

ரஜினியுடன் பொன். ராதாகிருஷ்ணன் சந்திப்பு

Published On 2019-11-06 16:36 GMT   |   Update On 2019-11-06 16:36 GMT
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார்.
சென்னை:

நடிகர் ரஜினிகாந்த், சினிமாத் துறையில் சிறப்பாக சேவையாற்றியதற்காக மத்திய அரசு அவருக்கு ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ என்கிற பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது.

கோவாவில் வரும் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 10 ஆயிரம் பார்வையாளர்கள் முன்னிலையில் ரஜினிக்கு வழங்கப்படும் இந்த சிறப்பு விருது மிகப் பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது. தனக்கு வழங்கப்பட உள்ள இந்த விருது பற்றி ரஜினிகாந்த் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, மத்திய அரசின் சிறப்பு விருது பெறவுள்ள அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News