செய்திகள்

கிர்கிஸ்தான் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் முக்கிய ஆலோசனை

Published On 2019-05-22 09:54 GMT   |   Update On 2019-05-22 10:01 GMT
ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிஷ்கெக் நகருக்கு வந்துள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பேக்கோவ்-ஐ சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பிஷ்கெக்:

சீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை மந்திரிகளின் மாநாடு கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் நடைபெற்று வருகிறது.



மாநாட்டில் பங்கேற்க பிஷ்கெக் நகருக்கு வந்துள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பேக்கோவ்-ஐ  சந்தித்தார். இந்தியா-கிர்கிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இந்த சந்திப்பின்போது அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

பின்னர், சீனா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை உயரதிகாரிகளுடன் சுஷ்மா உள்ளிட்ட இந்திய அதிகாரிகள் விரிவான ஆலோசனை நடத்தினர்.

Tags:    

Similar News