செய்திகள்
குடவாசல் அருகே விவசாயியிடம் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது
குடவாசல் அருகே விவசாயியிடம் தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடவாசல்:
குடவாசல் அருகே உள்ள சிமிழி மேலத்தெருவை சேர்ந்தவர் மருதையன் (வயது38). விவசாயி. இவர் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச வாய்க்காலை சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது வாய்க்காலில் முள் கட்டு இருந்ததால் அதனை தீ வைத்துக் கொளுத்தி விட்டு தண்ணீர் பாய்ச்ச முயற்சி செய்தார். அப்போது காப்பனாமங்கலம் அக்ரஹார தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (48), ஆறுமுகம் (60) ஆகிய இருவரும் வாய்க்காலில் உள்ள முள் கட்டை கொளுத்தியது குறித்து கேட்டு, தகராறில் ஈடுபட்டதாகவும், ஆறுமுகம் தன் கையில் இருந்த அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து குடவாசல் போலீசில் மருதையன் புகார் கொடுத்தார். அதன்பேரில் குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவேல், சப்-இன்ஸ்பெக்டர் உத்திராபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியன், ஆறுமுகம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.