ஆன்மிகம்
மயில் வாகனத்தில் உற்சவர் விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

வருடாந்திர பிரம்மோற்சவ விழா 4-வது நாள்: மூஷிக வாகனத்தில் விநாயகர் உலா

Published On 2021-09-14 03:12 GMT   |   Update On 2021-09-14 03:12 GMT
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் உற்சவர் விநாயகர் மயில் வாகனத்தில் உலா வந்தார். அதைத் தொடர்ந்து மூஷிக வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் 21 நாள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் உற்சவர் விநாயகர் மயில் வாகனத்தில் உலா வந்தார். அதைத் தொடர்ந்து நேற்று காலை மூஷிக வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

முன்னதாக காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து மூஷிக வாகனத்துக்கு ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்களும், பக்தர்களும் பூஜை செய்து உற்சவர் வீதிஉலாைவ தொடங்கி வைத்தனர். அதில் அதிகாரிகளும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News