செய்திகள்

உ.பி.யின் ஷாஜஹான்பூரில் மின்னல் தாக்கி 6 பேர் பலி

Published On 2018-09-01 21:05 GMT   |   Update On 2018-09-01 21:05 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். #Lightning
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்பான விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உ.பி.யின் ஷாஜஹான்பூர் பகுதியில் மின்னல் தாக்கிய சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் மின்னல் தாக்கி பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மின்னல் தாக்கி பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் அளிக்கப்படும் என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News