செய்திகள்
கொரோனா வைரஸ்

அரியலூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி

Published On 2021-06-21 10:42 GMT   |   Update On 2021-06-21 10:42 GMT
அரியலூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 81 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயதுடைய பெண் ஒருவரும், அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 80 வயதுடைய மூதாட்டியும், 63, 47 வயதுடைய ஆண்கள் 2 பேரும் என மொத்தம் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 187 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 76 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 562 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 527 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று 1,833 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 52 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கொரோனாவுக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 42 வயதுடைய ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் 96 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 356 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 285 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் நேற்றும் கோவாக்சின் தடுப்பூசி இல்லாததால், கோவிஷீல்டு தடுப்பூசி 1,065 பேருக்கு போடப்பட்டது. இதனால் கோவாக்சின் 2-வது தவணை தடுப்பூசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 81,198 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 5,090 கோவிஷீல்டு தடுப்பூசி மட்டும் கையிருப்பில் உள்ளது. ஆனால் கோவாக்சின் தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News