செய்திகள்
கோப்புபடம்

போலீஸ்காரருக்கு மிரட்டல் - தந்தை, மகன் கைது

Published On 2021-10-11 12:31 GMT   |   Update On 2021-10-11 12:31 GMT
போலீஸ்காரரை மிரட்டிய தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர் இதனை தொடர்த்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
எஸ்.புதூர்:

எஸ்.புதூர் அருகே உள்ள வலசைப்பட்டி கிராமத்தில் மூதாட்டி ஒருவர் இறப்பில் இறுதிசடங்கு செய்வதில் தகராறு நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இந்த நிலையில் புழுதிபட்டி போலீஸ் நிலைய காவலர் வினோத் சம்பவ இடத்திற்கு சென்றார்.

அப்போது அங்கிருந்த வலசைப்பட்டி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் மகன் சுப்பிரமணியன் (வயது53) மற்றும் அவரது மகன் சந்திரசேகரன் (23), பெருமாள் மகன் செல்வம் ஆகிய 3 பேர் சேர்ந்து காவலர் வினோத்தை கட்டையைகாட்டி மிரட்டியும், தகாத வார்த்தையால் பேசியும் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து புழுதிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வலசைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் சந்திரசேகரன் ஆகிய 2 பேைரயும் கைது செய்து, சிங்கம்புணரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்பு பரமக்குடி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பெருமாள் மகன் சுப்பிரமணியனை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News