செய்திகள்
பூக்கள்

ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

Published On 2021-10-13 02:39 GMT   |   Update On 2021-10-13 02:39 GMT
ஆயுத பூஜையையொட்டி குபேர் மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுத பூஜை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. உழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த நாளில் தொழிலாளர்கள் தங்கள் உபகரணங்களை பூஜையிட்டு வழிபடுவார்கள். அந்த வகையில் வீடுகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் ஆயுத பூஜை உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இதையொட்டி நேற்று குபேர் மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதாவது கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்ற மல்லிகை தற்போது 700-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ரூ.250 விற்ற முல்லை ரூ.450-க்கும், ரூ.150 விற்ற கனகாம்பரம் ரூ.250-க்கும், ரூ.150-க்கு விற்ற பன்னீர் ரோஜா ரூ.240-க்கும் விற்பனை ஆனது. இன்று (புதன்கிழமை) பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News