செய்திகள்
வல்லத்தில் சில்லறை கேட்பதுபோல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது
வல்லத்தில் சில்லறை கேட்பதுபோல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சை அருகே உள்ள வல்லம் அகிலாங்கரை தெரு பகுதியில் நேற்று ஸ்கூட்டரில் வந்த ஒருவர் அங்கு நடந்து வந்தவரிடம் ரூ.2 ஆயிரத்துக்கு சில்லறை கேட்பதுபோல் நடித்து பணத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றார். இதை அறிந்த வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தாமஸ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று வல்லம் புறவழிச்சாலை அருகே ஸ்கூட்டரில் சென்ற நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட நபர் தஞ்சை கரந்தை பூக்கொல்லை பகுதியை சேர்ந்த கனகசுந்தரம் (வயது50) என்பது தெரியவந்தது. மேலும் அவர் மீது பாப்பாநாடு, தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் கொள்ளை வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த வல்லம் போலீசார் கனகசுந்தரத்தை கைது செய்தனர். வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.