செய்திகள்
விபத்து பலி

தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலி

Published On 2021-10-16 15:08 GMT   |   Update On 2021-10-16 15:08 GMT
தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:

தஞ்சை அருகே உள்ள புதுக்கரியப்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது49). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் செங்கிப்பட்டி கடைவீதிக்கு சென்றார். பின்னர் தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது வளம்பக்குடி பிரிவு சாலை அருகே தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பெரியசாமி சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்ட பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமி மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனம் மற்றும் அதன் டிரைவரை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News