உள்ளூர் செய்திகள்
தற்கொலை

திருவள்ளூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-01-26 03:48 GMT   |   Update On 2022-01-26 03:48 GMT
திருவள்ளூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பெரியார் நகரை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் அருண் பிரசாத் (வயது 24). இவர் சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று தன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News