ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி

இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டியை நீட்டித்த மாருதி சுசுகி

Published On 2021-07-03 09:55 GMT   |   Update On 2021-07-03 09:55 GMT
கொரோனாவைரஸ் ஊரடங்கு காரணமாக மாருதி சுசுகி நிறுவனம் தனது வாகனங்களுக்கு வழங்கும் இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டிக்கான அவகாசத்தை நீட்டித்துள்ளது.


மாருதி சுசுதி நிறுவனம் இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி சலுகைக்கான கால அவகாசத்தை மீண்டும் நீட்டித்து இருக்கிறது. அதன்படி இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி ஜூலை 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.



சில மாதங்களுக்கு முன் மாருதி சுசுகி நிறுவனம் தனது வாகனங்களுக்கு வாரண்டி, நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் கார் பராமரிப்பு சேவை உள்ளிட்டவைகளுக்கான கால அவகாசத்தை ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தது. தற்போது இவற்றுக்கான கால அவகாசத்தை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.

அதன்படி மார்ச் 15, 2021 முதல் மே 31, 2021 வரையிலான காலக்கட்டத்தில் நிறைவுற்ற இலவச சர்வீஸ் உள்ளிட்ட சேவைகளுக்கான கால அவகாசம் ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக டொயோட்டா, எம்ஜி மோட்டார், ஸ்கோடா, மஹிந்திரா, டாடா போன்ற நிறுவனங்களும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளன.  
Tags:    

Similar News