உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரியில் மாணவியர் விடுதிகளை கலெக்டர் இரவு திடீரென ஆய்வு செய்த போது எடுத்தபடம்.

கிருஷ்ணகிரியில் மாணவியர் விடுதிகளை இரவில் கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2022-05-06 09:57 GMT   |   Update On 2022-05-06 09:57 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதிகளை கலெக்டர் நேற்று முன்தினம் இரவு திடீரென ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் நாகரசம்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி, அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவியர் விடுதிகளை நேற்று முன்தினம் இரவு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை வசதிகள், சுற்றுப்புறத் தூய்மை, மாணவர்களின் வருகைப்பதிவேடு, சமையல் கூடம், கழிப்பறை, குடிநீர் மற்றும் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், இந்த விடுதிகளில் காலை உணவாக பொங்கல், இட்லி, ரவைகிச்சடி, எலுமிச்சை சாதம் ஆகியவை சுழற்சி முைறயிலும், மதிய உணவாக சாதம், சாம்பார், பொறியல், மோர், குருமா, மட்டன், சிக்கன் வாரத்தில் 7 நாட்கள் சுழற்சி முறையிலும், இரவு சாதம், காரகுழம்பு, இட்லி, சாம்பார் என சுழற்சி முறையிலும் வழங்கப்படுகிறது. மாணவிகளின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் விடுதி காப்பாளர்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் நடத்த ப்படுகிறது.

மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக 25 மாணவர் விடுதியும், 19 மாணவியர் விடுதியும் என மொத்தம் 44 விடுதிகளில் 3016 மாணவ, மாணவியர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். 

மேலும், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு வரை தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு 4 இலவச இணை சீருடைகள் வழங்கப்படுகிறது. 

மேலும் சிறப்பு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சிகள், ஆங்கில பேச்சாற்றல் மற்றும் திறன் மேம்பாட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. அரசு விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்கள் தங்களின் கல்வி தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என்றார்.
Tags:    

Similar News