செய்திகள்
ஜம்மு-காஷ்மீரில் பஸ் நிலையத்தில் கையெறி குண்டு தாக்குதல்: 7 பேர் காயம்
பா.ஜனதா கவுன்சிலர் ராகேஷ் பண்டிதா பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், இன்று பஸ் நிலையம் மீது கையெறி குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ட்ரால் என்ற பகுதியின் முக்கிய பஸ் நிலையத்தில் பயங்கரவாதிகள் திடீரென கையெறி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள் 7 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு முதலுதவி பெற அழைத்துச் செல்லப்பட்டனர்.
கடந்த புதன்கிழமை பா.ஜனதா கவுன்சிலர் ராகேஷ் பண்டிதா வீட்டில் இருந்து வெளியே தனது நண்பரை சந்தித்த சென்றார். அவருக்கு இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் உண்டு. அவர்களுடன் செல்லும்போது, பயங்கரவாதிகள் ராகேஷை சுட்டுக்கொலை செய்தனர்.