செய்திகள்
கோப்புபடம்

கோவையில் 2-வது வாரமாக ஜவுளிகடை- நகை கடைகள் அடைப்பு

Published On 2021-09-11 14:34 GMT   |   Update On 2021-09-11 14:34 GMT
கோவையில் மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து நகைக் கடைகள் துணிக்கடைகளும் அடைக்கப்பட்டதால் அந்த பகுதி வெறிச்சோடியது.

கோவை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு அளித்துள்ள தளர்வுகளிலும் இங்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலைக் குறைக்கும் வகையில் கடந்த 1-ந் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 8 சாலைகள், திருச்சி சாலையில் சிங்காநல்லூர் சிக்னல் முதல் ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரை, அவினாசி சாலையில் உள்ள 6 சாலைகள். காந்திபுரம் 1 முதல் 11 வரையிலான தெருக்கள் உள்பட பல்வேறு சந்திப்புகள், வீதிகள் ஆகிய தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், மளிகை கடைகள், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் இன்று 2-வது வாரமாக அடைக்கப்பட்டு இருந்தது.

இதேபோன்று கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள 32 டாஸ்மாக் மது கடைகள் மூடப்பட்டிருந்தன.

அதேபோல மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து நகைக் கடைகள் துணிக்கடைகளும் அடைக்கப்பட்டதால் அந்த பகுதி வெறிச்சோடியது.

ஓட்டல்கள், தேநீர்க்கடை கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க கூடுதல் நேரம் அனுமதிக்கப்படுகிறது. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

Tags:    

Similar News