ஆட்டோமொபைல்
2.5 கோடி யூனிட்கள் உற்பத்தியை கடந்த ஹீரோ மோட்டோகார்ப்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஹரித்வார் உற்பத்தி ஆலையில் சுமார் 2.5 கோடி யூனிட்கள் உற்பத்தியை கடந்துள்ளது.
உலகின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹரித்வார் தயாரிப்பு ஆலையில், 2.5 கோடி யூனிட்களை உருவாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஹரித்வார் ஆலையில், 11 ஆண்டுகளில் 2.5 கோடி யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது. அந்த வகையில் குறுகிய காலக்கட்டத்தில் இத்தனை யூனிட்கள் கடந்த முதல் நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் இருக்கிறது.
இதுதவிர உலகின் இரண்டாவது மிகப்பெரும் இருசக்கர வாகன தயாரிப்பு ஆலையாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஹரித்வார் ஆலை இருக்கிறது. இந்த ஆலையில் தினசரி அடிப்படையில் 9500 இருசக்கர வாகனங்கள் உருவாக்கப்படுகின்றன.
ஹரித்வார் ஆலையில் ஹீரோ ஹெச்.எஃப். டீலக்ஸ், ஹீரோ ஸ்பிளென்டர் பிளஸ், ஹீரோ ஸ்பிளென்டர் ஐ ஸ்மார்ட் 110, ஹீரோ பேஷன் 110 போன்ற வாகனங்கள் உருவாக்கப்படுகின்றன.