செய்திகள்
மரணம்

சிவகாசி அருகே பாம்பு கடித்து முதியவர் பலி

Published On 2020-11-28 12:07 GMT   |   Update On 2020-11-28 12:07 GMT
சிவகாசி அருகே பாம்பு கடித்து முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:

சிவகாசி மேற்கு ரிசர்வ்லைன் இந்திராநகரை சேர்ந்தவர் பாலு (வயது 60). இவர் கங்காகுளம் ரோட்டில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலுவை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. உடனே அவர் வீட்டில் உள்ளவர்களிடம் கூறி கைவைத்தியம் செய்துள்ளார். இதில் முழு பலன் அளிக்காத நிலையில் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News