உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண் கைது
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்துப்பணியில் இருந்தனர். அப்போது தியாகராஜபுரத்தில் வீட்டின் அருகில் சாராயம் விற்ற அதே ஊரை சேர்ந்த மொட்டையம்மாள்(வயது 58) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.