செய்திகள்
மாமல்லபுரம் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
மாமல்லபுரம் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கடம்பாடியில் உள்ள வேணுநாத பெருமாள் கோவில் முகப்பில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கான உண்டியல் ஒன்று உள்ளது. நேற்று அதிகாலை கோவில் நிர்வாகத்தினர் வந்தபோது உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் மாமல்லபுரம் போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.