லைஃப்ஸ்டைல்
தாம்பத்தியமும்... இரு விதமான கண்ணோட்டமும்...

தாம்பத்தியமும்... இரு விதமான கண்ணோட்டமும்...

Published On 2021-02-26 07:31 GMT   |   Update On 2021-02-26 07:31 GMT
தாம்பத்திய உறவினை ஒவ்வொரு தம்பதிகளும் இரண்டு விதமான கண்ணோட்டத்தோடு அணுகுகிறார்கள். தாம்பத்தியம் பற்றி அனைத்து தம்பதிகளும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய விஷயங்கள் இதோ…!
தாம்பத்தியம் என்பது ஆண் பெண் இருவரும் மனப்பூர்வமாக, உடல்ரீதியாக கொண்டாடப்பட வேண்டிய ஒரு திருவிழா. தாம்பத்திய உறவினை ஒவ்வொரு தம்பதிகளும் இரண்டு விதமான கண்ணோட்டத்தோடு அணுகுகிறார்கள். தாம்பத்தியம் பற்றி அனைத்து தம்பதிகளும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய விஷயங்கள் இதோ…!

கணவன்- மனைவி இருவரும் எப்போதுமே அந்தரங்க சுத்தத்தை கடைப்பிடித்தல் வேண்டும் அப்போது தான் அவர்களால் மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கையை என்றுமே அனுபவிக்க முடியும். தாம்பத்திய செயல்பாட்டை தம்பதிகள் இரண்டு விதமான கண்ணோட்டத்தோடு அணுகுகிறார்கள்.

ஒரு பிரிவினர் அதில் முழுமையான ஈடுபாடு காட்டாமல் அதை ஒரு ஒரு வித சடங்காக மட்டுமே கருதுகிறார்கள். இன்னொரு பிரிவினர் புதுவிதமாக, வித்தியாசமாக அனுபவிக்க வேண்டிய ஒரு சிறந்த கலையாக அதைப் பார்க்கிறார்கள். சடங்காக நினைக்கும் முதல் வகை ஜோடியினர் பெரும்பாலும் உடல் அந்தரங்க சுத்தத்தில் பெரிதாக அக்கறை செலுத்துவதில்லை. ஏனோதானோவாக நடந்து கொள்கிறார்கள். கலையாக கருதும் இரண்டாவது வகையினரே பெரும்பாலும் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

தாம்பத்திதியத்தை முழுமையாக கொண்டாடுவதற்கு தம்பதிகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயாராக வேண்டியது மிக மிக அவசியம். அத்தகைய தயார் நிலையில், குறிப்பிடத்தக்கது சுத்தம். உடல் மிகுந்த சுத்தமாக இருக்கவேண்டும். அதோடு சுற்றுப்புறமும் சுத்தமாக இருக்கவேண்டும்.

அத்தகைய  தம்பதிகளின் உடல் சுத்தத்தில் முதலிடம் பெறுவது, சருமம். மனித உடலை அற்புதமாக மூடி அதற்கு சிறந்த அழகையும், பாதுகாப்பையும் தருவது இந்த சருமம் தான். . உடலில் பெரிய உறுப்பாக கருதப்படும் இந்த சருமத்தை சுத்தமாக வைத்திருந்தால் உடலையே சுத்தமாக வைத்திருப்பதாக அர்த்தம். சருமத்தை சுத்தம் செய்யாவிட்டால் பாக்டீரியா, பூஞ்சை  போன்ற கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் வாழும் கூடாரம் போல் உடல் மாறி விடும். அப்போது நாற்றம் வீசுதல், சொறி ஏற்படுதல் போன்றவை உருவாகும். எப்போதாவது உடலை சுத்தம் செய்வதைவிட, குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக சுத்தம் செய்தால் தான் நாம் சுகாதாரமாக வைத்துக்கொள்ள முடியும்.

‘அது தான் நான் தினமும் குளித்துவிடுகிறேனே’ என்கிறீர்களா.. சரிதான். ஆனால் காக்காய் குளியல் போடாமல் நன்றாக குளிக்கவேண்டும். சோப்பு பயன்படுத்திதான் எல்லோரும் குளிக்கிறார்கள் என்றாலும், அந்த சோப்பை எந்த இடத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பது தெரிந்திருக்கவேண்டும். ஆண், பெண் இருவரும் ரோமம் நிறைந்த பகுதிகளில், ரோமம் வளரக்கூடிய பகுதிகளில் சோப்பை தேய்த்து நன்றாக குளிக்கவேண்டும்.

மணக்கும் தன்மைகொண்ட ஏதாவது திரவம் ஒன்றை சேர்த்து மிதமான சுடுநீரில் குளிப்பது நல்லது. அக்குள், தொடை இடுக்கு, காதுகளின் பின்பாகம், தொப்புள், மார்பக இடுக்குகள், பிறப்பு உறுப்பு பகுதி, பின்பகுதி போன்றவைகளில் இருக்கும் அழுக்கு நீங்கும் அளவுக்கு குளிக்கவேண்டும்.

ஆணும், பெண்ணும் தினமும் இரண்டு வேளை குளிக்கலாம். நீங்கள் உறவுக்கு தயாராக இருந்தால், உறவு வைத்துக்கொள்ளும் நேரத்திற்கு சற்று முன்பு இரண்டாவது குளியலை வைத்துக்கொள்ளலாம். இது உறவுக்கு மட்டுமல்ல, உறக்கத்திற்கும் ஏற்றது.

பெரும்பாலான தம்பதிகள் ஆரம்பிக்கும் போது முத்தத்தோடு தான் உறவைத் தொடங்குகிறார்கள். அதனால் உறவுக்கு நுழைவு வாசல் போன்று வாய் தான் இருக்கிறது. வாய், உதடுகள், பற்களை கணவன்-மனைவி இரு வருமே சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் இல்லையென்றால் உறவு இடையில் தடைபடலாம். இரவில் ஒரு முறை பற்களைத் துலக்கி, வாயை சுத்தம் செய்வதற்கு இரண்டு நிமிடங்கள் போதும். இந்த இரண்டு நிமிட சுத்தம் தாம்பத்திதியத்தை மிகவும் இனிமையாக்கி விடும்.
Tags:    

Similar News