தொழில்நுட்பம்
பிஎஸ்என்எல்

அனைத்து சலுகைகளிலும் கூடுதல் டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்

Published On 2020-10-07 08:55 GMT   |   Update On 2020-10-07 08:55 GMT
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து பிரீபெயிட் சலுகைகளிலும் 25 சதவீதம் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.


பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து பிரீபெயிட் சலுகைகளுக்கும் 25 சதவீதம் வரை கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. கூடுதல் டேட்டா அக்டோபர் 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

டெலிகாம் துறையில் 20 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில், பிஎஸ்என்எல் அறிவித்து இருக்கிறது. இது கஸ்டமர் டிலைட் மந்த் எனும் பெயரில் வழங்கப்படுகிறது. கூடுதல் டேட்டா பலன்களை அக்டோபர் மாதம் வரை வழங்குகிறது. கூடுதல் சலுகை பற்றிய அறிவிப்பு பிஎஸ்என்எல் தமிழ் நாடு வலைதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.



இதே சலுகை ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் தெலுங்கானா வட்டாரங்களுக்கான ட்விட்டர் அக்கவுண்ட்களிலும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த சலுகை நாடு முழுக்க அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படுவதாக பிஎஸ்என்எல் அறிவித்து இருக்கிறது.

முன்னதாக சென்னை வட்டாரத்தில் மட்டும் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 49 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. இது 100 நிமிடங்கள் வாய்ஸ் கால், 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களை வழங்குகிறது.
Tags:    

Similar News