செய்திகள்
இலங்கை தேர்தல் முடிவு மிகவும் கவலையளிக்கிறது - திருமாவளவன் பேட்டி
இலங்கை தேர்தல் முடிவு மிகவும் கவலையளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை:
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார்.
சந்திப்பிற்கு பின் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இலங்கை தேர்தல் முடிவு மிகவும் கவலையளிக்கிறது. சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தேன். உள்ளாட்சி மன்றங்களில் துணை தலைவர் பதவிக்கு இட ஒதுக்கீடு தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.