செய்திகள்
முதுமலை புலிகள் காப்பகம்

முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி தற்காலிக நிறுத்தம்

Published On 2021-09-11 08:20 GMT   |   Update On 2021-09-11 08:20 GMT
கொரோனா பரவல் காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் கடந்த 3-ந் தேதி திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 6-ந் தேதி யானை சவாரி தொடங்கியது. இதனால் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அவர்கள் யானை சவாரி செய்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News