செய்திகள்
கோப்புபடம்

அன்னவாசல் அருகே சூதாடிய 4 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2020-10-31 10:26 GMT   |   Update On 2020-10-31 10:26 GMT
அன்னவாசல் அருகே சூதாடிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ரூ.1,800-ஐ பறிமுதல் செய்தனர்.
அன்னவாசல்:

இலுப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் மேலப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது, அங்கு மேலப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 38) உள்பட 4 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசார் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.1,800-ஐ பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News