செய்திகள்
அன்னவாசல் அருகே சூதாடிய 4 பேர் மீது வழக்குப்பதிவு
அன்னவாசல் அருகே சூதாடிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ரூ.1,800-ஐ பறிமுதல் செய்தனர்.
அன்னவாசல்:
இலுப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் மேலப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, அங்கு மேலப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 38) உள்பட 4 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசார் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.1,800-ஐ பறிமுதல் செய்தனர்.