செய்திகள்
கொரோனா அச்சுறுத்தல் - மக்களவையும் காலவரம்பின்றி ஒத்திவைப்பு
அக்டோபர் 1-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் மக்களவை கூட்டத்தொடர் 8 நாட்களுக்கு முன்பாகவே நிறைவு செய்யப்பட்டது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மக்களவை கூட்டத்தொடர் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டுள்ளது.
அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த கூட்டத்தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 நாட்களுடன் முடித்துக் கொள்ளப்பட்டுள்ளது.
மக்களவையை காலவரம்பின்றி ஒத்திவைப்பதாக மக்களவை தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
ஏற்கனவே, கொரோனா அச்சுறுத்தலால் மாநிலங்களவையும் காலவரம்பின்றி ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.