செய்திகள்

பல்லடத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை

Published On 2018-03-13 11:37 GMT   |   Update On 2018-03-13 11:37 GMT
பல்லடத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடம்:

பல்லடம் அறிவொளி நகரை சேர்ந்தவர் செந்தில் குமார் (38) கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 3 மாதத்திற்கு முன் கட்டிட வேலையில் ஈடுபட்டு இருந்த போது கீழே விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் வீட்டில் இருந்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாக கூறப்படுகிறது. மன வேதனையில் இருந்த செந்தில் குமார் சம்பவத்தன்று தனது வேட்டியால் வீட்டின் விட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட செந்தில் குமாருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.

Tags:    

Similar News