செய்திகள்
ஓசூர் அருகே கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திகிரி:
ஓசூர் அருகே உள்ள மத்திகிரி நவதி ஸ்ரீதேவி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 30), கார் டிரைவர். குடும்ப பிரச்சினை காரணமாக இவருடைய மனைவி இவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்றார். இதனால் மனமுடைந்த ராஜேந்திரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.