செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

அயோத்தி வழக்கில் இனி கூடுதலாக ஒரு மணி நேரம் விசாரணை நடைபெறும் - சுப்ரீம் கோர்ட்

Published On 2019-09-20 11:40 GMT   |   Update On 2019-09-20 11:40 GMT
அயோத்தி வழக்கில் வரும் திங்கள் முதல் கூடுதலாக ஒரு மணி நேரம் விசாரணை நடைபெறும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக இந்துக்கள் கருதும் இடத்தில் பாபர் மசூதி அமைந்திருந்தது. அந்த மசூதி கடந்த 1992-ல் இடிக்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய அந்த இடத்துக்கு உரிமை கோரி தொடரப்பட்ட வழக்குகளை அலகாபாத் ஐகோர்ட் விசாரித்து கடந்த 2010-ல் தீர்ப்பளித்தது.

இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை நிர்மோஹி அகாரா (துறவியர் அமைப்பு), சன்னி மத்திய வக்பு வாரியம், ராம் லல்லா ஆகிய மூன்று தரப்புகளுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இத்தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது.

சுப்ரீம் கோர்ட்டில் அயோத்தி வழக்கு தினசரி அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அக்டோபர் 18-ம் தேதிக்குள் வாதங்களை முடித்துக்கொள்ள சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு 28-வது நாளாக இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இந்நிலையில், அயோத்தி வழக்கில் வரும் திங்கள் முதல் கூடுதலாக ஒரு மணி நேரம் விசாரணை நடைபெறும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் அலுவல்கள் முடியும் 4 மணிக்கு பதிலாக கூடுதலாக ஒரு மணி நேரம் அதாவது 5 மணி நேரம் இந்த வழக்கு விசாரணையை தொடர முடிவு செய்திருப்பதாக சுப்ரீம் கோர்ட், வழக்கில் தொடர்புடைய இரு தரப்பினர்களிடமும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News