செய்திகள்
தற்கொலை

குடும்ப தகராறில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-11-07 08:11 GMT   |   Update On 2020-11-07 08:11 GMT
ஊரப்பாக்கம் அருகே குடும்ப தகராறில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை அடுத்த காரணைப்புதுச்சேரி கிராமத்திலுள்ள கோகுலம் காலனி 3-வது தெருவை சேர்ந்தவர் தேவன் (வயது 45). இவர் அதே பகுதியில் கேபிள் டி.வி. ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவர் தினமும் மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கம், இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

இதனால் மனைவி மற்றும் அவரது குழந்தைகள் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். இதனால் மனமுடைந்த தேவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News