செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

Published On 2019-05-12 06:24 GMT   |   Update On 2019-05-12 06:24 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று 65-வது பிறந்தநாள்.

தேர்தல் பிரசாரத்துக்காக திருப்பரங்குன்றம் சென்றிருந்த அவர் இன்று காலையில் மதுரையில் தங்கி இருந்தார். அப்போது தனது பிறந்த நாளை கொண்டாடாமல் எளிமை காட்டி வழக்கம் போல் பிரசார பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

அவரது பிறந்த நாளை தெரிந்து வைத்திருந்த பிரதமர் நரேந்திர மோடி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி னார். அப்போது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

 


தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

சாமானிய மக்களின் தொண்டராக தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கி மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா வழியில் சாமானிய மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி ஏழை, எளிய மக்களின் கனவுகளை நன வாக்கி வரும் தமிழக முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

தாங்கள் நீண்ட ஆயுளுடன், உடல் நலத்துடன் மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கின்றேன். இந்த தேர்தல் வெற்றியோடு இன்னும் பல வெற்றிகளை பெற்று மக்கள் தொண்டாற்ற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News