உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

உல்லாசத்திற்கு மறுத்த பெண் கொடூரக் கொலை - கணவன் வெறிச்செயல்

Published On 2022-01-24 10:16 GMT   |   Update On 2022-01-24 10:16 GMT
நள்ளிரவு 11.30 மணியளவில் கணேசன் மனைவியை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.
மடத்துக்குளம்:

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பாரிக்குழி நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது  58). இவரது மனைவி ஈஸ்வரி (54). இவர்களுக்கு தினேஷ்குமார் (29) என்ற மகன் உள்ளார். இவர் ராஜஸ்தானில் வேலை பார்த்து வருகிறார். கணேசன், ஈஸ்வரி இருவரும் வீட்டில் நெசவு தொழில் செய்து வந்தனர்.  

இந்தநிலையில் நேற்றிரவு சாப்பிட்டு விட்டு இருவரும் தூங்கசென்றனர். நள்ளிரவு 11.30மணியளவில் கணேசன் மனைவியை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். இதற்கு ஈஸ்வரி மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.  

இதில் ஆத்திரமடைந்த கணேசன், வீட்டில் இருந்த கல்லை தூக்கி மனைவியின் தலையில் போட்டுள்ளார். இதில் ஈஸ்வரி தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து கொலையை மறைக்க கணேசன் வீட்டில் இருந்த தார்பாயை எடுத்து அதில் ஈஸ்வரியின் உடலை வைத்து சுற்றி அருகில் உள்ள அமராவதி ஆற்றில் வீசுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அதிகாலை நேரமாகிவிட்டதால் அவர் அந்த முயற்சியை கைவிட்டார். 

இன்று காலை ஈஸ்வரியின் தாய் ராஜம்மாள்(80) வீட்டிற்கு சென்று பார்த்த போது ஈஸ்வரி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து மடத்துக்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

பின்னர் ஈஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கணேசனை கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். உல்லாசத்துக்கு மறுத்த மனைவியை கணவனே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
Tags:    

Similar News