செய்திகள்
உ.பி.: குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி வருகிற 20-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி வருகிற 20-ந்தேதி (நாளை மறுமதினம்) உத்தர பிரதேசத்தில் உள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், யோகி ஆதித்யநாத், விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த வாரத்தில் இருந்து சர்வதேச விமான சேவை தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.