ஆன்மிகம்
சோலைமலை முருகன் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
மதுரை அருகே அழகர்மலை உச்சியில் உள்ள 6-வது படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது.
மதுரை அருகே அழகர்மலை உச்சியில் உள்ள 6-வது படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. இதையொட்டி அங்குள்ள வித்தக விநாயகருக்கு அருகம்புல், ரோஜா உள்ளிட்ட மலர் மாலைகள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி தரிதனம் செய்தனர்.
அருகில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வேல்சன்னதியிலும் விசேஷ பூஜைகள் நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அருகில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வேல்சன்னதியிலும் விசேஷ பூஜைகள் நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.