செய்திகள்
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகன்-டிரைவர் உள்பட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதனின் மகன், சகோதரி உள்ளிட்ட 8 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பசுமை வழிச் சாலையில் உள்ள நீதிபதிகள், அமைச்சர்கள் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நீதிமன்ற பெண் பணியாளர் ஒருவரின் கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தெரிவிக்காமல் அந்த பெண் நீதிபதி வீட்டுக்கு பணிக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மற்றவர்களுக்கும் கொரோனா பரவியுள்ளது.
இதனால் நீதிபதியின் மகன், சகோதரி, வாகன ஓட்டுனர், நீதிமன்ற பணியாளர், உதவியாளர், காவலர் என 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நீதிபதிகள், அமைச்சர்கள் குடியிருக்கும் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பசுமை வழிச் சாலையில் உள்ள நீதிபதிகள், அமைச்சர்கள் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நீதிமன்ற பெண் பணியாளர் ஒருவரின் கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தெரிவிக்காமல் அந்த பெண் நீதிபதி வீட்டுக்கு பணிக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மற்றவர்களுக்கும் கொரோனா பரவியுள்ளது.
இதனால் நீதிபதியின் மகன், சகோதரி, வாகன ஓட்டுனர், நீதிமன்ற பணியாளர், உதவியாளர், காவலர் என 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நீதிபதிகள், அமைச்சர்கள் குடியிருக்கும் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.