செய்திகள்
பென்னாகரம் அருகே சிறுமி மாயம்- தந்தை புகார்
பென்னாகரம் அருகே தாத்தா வீட்டுக்கு சென்ற சிறுமி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் சிறுமியை தேடி வருகிறார்கள்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள சஞ்சல் நத்தம் அருகே எம்.தண்டா கிராமத்தை சேர்ந்தவர் தேவன். இவரது மகள் புவனேஸ்வரி (வயது17). இவர் கடந்த 14-ந் தேதி ராமகொண்டஅள்ளியில் உள்ள அவரது தாத்தா மயிலேசன் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு சென்றார்.
ஆனால் புவனேஸ்வரி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் பதறிப்போன தேவன் பல இடங்களில் தனது மகளை தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தேவன் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் தனது மகள் புவனேஸ்வரி மாயமானார் எனவும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் புகார் செய்தார்.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான புவனேஸ்வரியை தேடி வருகின்றனர்.