ஆன்மிகம்
திருமலையில் பிரம்மோற்சவ விழா 7-வது நாள்: சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பசாமி காட்சி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சந்திர பிரபை வாகனச் சேவை நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 9 மணியளவில் கல்யாண உற்சவ மண்டபத்தில் உற்சவர் மலையப்பசாமி சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் சந்திர பிரபை வாகனச் சேவை நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று (வியாழக்கிழமை) மரத்தேரோட்டத்துக்கு பதிலாக சர்வ பூபால வாகனச் சேவையும், இரவு 7 மணியளவில் குதிரை வாகனச் சேவையும் நடந்தது.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் சந்திர பிரபை வாகனச் சேவை நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று (வியாழக்கிழமை) மரத்தேரோட்டத்துக்கு பதிலாக சர்வ பூபால வாகனச் சேவையும், இரவு 7 மணியளவில் குதிரை வாகனச் சேவையும் நடந்தது.