செய்திகள்
சிவகாசி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள பெரியபொட்டல்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவராஜ்பிரபு (வயது 31). கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்த இவர் சிறுநீரக கோளாறால் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் வாரத்திற்கு 2 முறை ரத்தம் சுத்திகரிப்பு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் மனமுடைந்த கட்டிட தொழிலாளி சிவராஜ்பிரபு வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி பாண்டியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.