செய்திகள்
இலங்கை டெஸ்ட் அணி பாகிஸ்தான் செல்கிறது

பாகிஸ்தான் செல்லும் இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு: முன்னணி வீரர்கள் செல்கிறார்கள்

Published On 2019-11-29 11:14 GMT   |   Update On 2019-11-29 11:14 GMT
பாகிஸ்தான் மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இந்தத் தொடர்களில் பாதுகாப்பு கருதி முன்னணி வீரர்கள் கலந்து கொள்ளவில்லை.

இரண்டாம் நிலை வீரர்களை கொண்ட இலங்கை அணி ஒருநாள் தொடரை இழந்தது. ஆனால் டி20 கிரிக்கெட் தொடரை 3-0 என கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வருமாறு பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று பாகிஸ்தான் சென்று விளையாட இலங்கை சம்மதம் தெரிவித்தது. முதல் டெஸ்ட் டிசம்பர் 11-ந்தேதி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்திலும், 2-வது டெஸ்ட் டிசம்பர் 19-ந்தேதி கராச்சி தேசிய மைதானத்திலும் நடக்கிறது.

இதற்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டது. 16 பேர் பட்டியலில் முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. திமுத் கருணாரத்னே (கேப்டன்), 2. ஒஷாடா பெர்னாண்டோ, 3. குசால் மெண்டிஸ், 4. மேத்யூஸ், 5. தினேஷ் சண்டிமல், 6. குசால் ஜனித் பெரேரா, 7. லஹிரு திருமானே, 8. தனஞ்ஜெயா டி சில்வா, 9. நிரோஷன் டிக்வெல்லா, 10. தில்ருவான் பெரேரா, 11. லசித் எம்பல்டெனியா, 12. சுரங்கா லக்மலம், 13. லஹிரு குமாரா, 14. விஷ்வா பெர்னாண்டோ, 15. கசுன் ரஜிதா, 16. லக்சன் சண்டகன்.
Tags:    

Similar News