உள்ளூர் செய்திகள்
வேலூர் வேலப்பாடி சுடுகாட்டில் சோமசேகர் உடலை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்

வேலூரில் ஐ.டி. ஊழியர் உடல் தோண்டி எடுத்து விசாரணை

Published On 2022-05-07 10:18 GMT   |   Update On 2022-05-07 10:18 GMT
வேலூரில் ஐ.டி. ஊழியர் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி புகார் அளித்ததால் உடலலை தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

வேலூர், சாய்நாதபுரம், பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சோமசேகர் (வயது 45). தனியார் ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்தார்.இவரது மனைவி பேபி கலா (40). சோம சேகர் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பேபி கலவை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். 

இதேபோல் பேபி கலாவும் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு 2-வதாக  சோமசேகரை திருமணம் செய்து கொண்டுள்ளார். சோம சேகர் தனது தாய் சாந்தா மற்றும் மனைவியுடன் சாய்நாதபுரத்தில் வசித்து வந்தார்.கொரோனா தொற்று பரவல் காரணமாக வீட்டில் இருந்தபடியே வேலை செய்து கொண்டு இருந்தார்.

கடந்த மாதம் பேபி கலா சோமசேகருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சென்னையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். 21-ந் தேதி சோம சேகருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. 

இதையடுத்து அவரது தாய் சாந்தா சோமசேகரை சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சோமசேகர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சோம சேகர் இறந்த தகவலை மனைவி பேபி கலாவுக்கு தெரிவிக்காமலேயே அவரது தாய் சாந்தா மகனின் உடலை வேலப்பாடியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தார். 

ஒரு வாரம் கழித்து கணவர் வீட்டிற்கு வந்த பேபி கலா கணவர் இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். என் கணவர் இறந்த தகவலை என்னிடம் கூறவில்லை என கேட்டார்.அதற்கு அவர் உன்னுடைய செல்போனில் இல்லாததால் தகவல் தெரிவிக்கவில்லை என கூறியுள்ளனர்.

பேபி கலா கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக பாகாயம் போலீசில் புகார் செய்தார். 

இதனையடுத்து பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தாசில்தார் செந்தில் வருவாய் ஆய்வாளர் முகமதியர் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலையில் பிணம் தோண்டி எடுக்கப்பட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News