செய்திகள்
கொடைக்கானலில் 40 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் பலி
கொடைக்கானலில் 40 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 100-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நகராட்சி அதிகாரிகளால் சீல்வைக்கப்பட்டது. அதன்பிறகு கட்டிடங்களை வரன்முறைபடுத்தும் விதமாக மீண்டும் திறக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் சீனிவாசபுரம் பகுதியில் சீல் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.
இந்த கட்டிடத்தில் லிப்ட் அமைக்கும் பணியை பெருமாள்மலையை சேர்ந்த கொத்தனார் ஏசு(37), மச்சூரை சேர்ந்த பாலசுப்பிரமணி(43) ஆகியோர் செய்து வந்தனர். எதிர்பாராதவிதமாக 40 அடி உயரத்தில் இருந்து ஏசு மற்றும் பாலசுப்பிரமணி தவறிவிழுந்தனர். அவர்கள் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
ஆனால் அங்கு ஏசு பரிதாபமாக உயிரிழந்தார். பாலசுப்பிரமணி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 100-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நகராட்சி அதிகாரிகளால் சீல்வைக்கப்பட்டது. அதன்பிறகு கட்டிடங்களை வரன்முறைபடுத்தும் விதமாக மீண்டும் திறக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் சீனிவாசபுரம் பகுதியில் சீல் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.
இந்த கட்டிடத்தில் லிப்ட் அமைக்கும் பணியை பெருமாள்மலையை சேர்ந்த கொத்தனார் ஏசு(37), மச்சூரை சேர்ந்த பாலசுப்பிரமணி(43) ஆகியோர் செய்து வந்தனர். எதிர்பாராதவிதமாக 40 அடி உயரத்தில் இருந்து ஏசு மற்றும் பாலசுப்பிரமணி தவறிவிழுந்தனர். அவர்கள் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
ஆனால் அங்கு ஏசு பரிதாபமாக உயிரிழந்தார். பாலசுப்பிரமணி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.