செய்திகள்
அரியலூரில் வீட்டில் ரூ.53 ஆயிரம் திருட்டு
அரியலூரில் வீட்டில் ரூ.53 ஆயிரம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மார்க்கெட் தெருவில் வசிப்பவர் விஜயலெட்சுமி(வயது 65). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு, நடைபயிற்சி சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மணிபர்சில் வைத்திருந்த ரூ.53 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது. இதுபற்றி அரியலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.