செய்திகள்
கோப்புப்படம்

இந்தியா, இங்கிலாந்திடம் இருந்து இலங்கை 1.35 கோடி கொரோனா தடுப்பூசி வாங்குகிறது

Published On 2021-02-23 22:45 GMT   |   Update On 2021-02-23 22:45 GMT
தடுப்பூசி போடும் பணிக்காக இந்தியா, இங்கிலாந்திடம் 1.35 கோடி கொரோனா தடுப்பூசியை இலங்கை அரசு ஆர்டர் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கொழும்பு:

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றாக திகழும் இலங்கை, அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறது. ஏற்கனவே புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் 5 லட்சம் டோஸ்களை அந்த நாட்டுக்கு இந்தியா அன்பளிப்பாக தந்துள்ளது.

இந்த நிலையில் இலங்கை தோட்டத்துறை மந்திரி ரமேஷ் பதிரானா கூறுகையில், “சீனா மற்றும் ரஷியாவின் தடுப்பூசிகள் இன்னும் தயாராகவில்லை. எனவே 2-வது கட்ட தடுப்பூசி போடுவதற்கு இலங்கை அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிகளை வாங்கும்” என குறிப்பிட்டார்.

முதல்கட்ட தடுப்பூசி போடும் பணிக்காக இலங்கை அரசு, இந்திய சீரம் நிறுவனத்திடம் 1 கோடி டோஸ் தடுப்பூசிக்கு ஆர்டர் செய்துள்ளது. இந்த நிலையில் மேலும் 35 லட்சம் தடுப்பூசிக்கு இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்திடம் இலங்கை அரசு ஆர்டர் செய்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியா, உலகின் மிகப்பெரிய மருந்து உற்பத்தி நாடாக திகழ்வதும், கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவை உலகின் பல நாடுகள் நாடி இருப்பதுவும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News